பயணம்
ஆசை பல கொண்டு வண்ணக்கனவுகளுடன்
அடி எடுத்து வைத்தாள் தன் திருமண வாழ்வினுள்.
இல்லை என்ற எண்ணமே தோன்றாமல் வளர்த்த பெரியோர்கள்.
உங்களிடம் தான் இல்லை என்று குறுக வைத்த புகுந்த இட மனிதர்கள்.
வசை, குறை, ஏளனம், படோடாபம், ஆணவம் நிறைந்த
இடத்திலிருந்து தவித்து பிரிந்து வந்தவளுக்கு
தனக்கென ஒரு வாழ்வு அமையுமா என்ற ஐயத்தின் நடுவே
வழி நெடுக வந்த நண்பனையும், சுமந்த தெய்வத்தையும்
மீறி ஈர்க்கிறது ஆன்மிகம்.
அதன் பாதையில் காலடி வைக்கையில், மீண்டும்
வசை, குறை, ஏளனம், படோடாபம், ஆணவம்
தலை நீட்டி அவளைப் பார்த்து எள்ளி நகையாடின,
நீ பொறியில் சிக்கிய எலி.
Comments [0]